சரஸ்வதி ஸ்துதி

"வெள்ளை தாமரையில் அமர்ந்திருப்பாள்,
அவள் கொள்ளை அழகோடு வீற்றிருப்பாள் .

வீணையின் நாதமதில் இணைந்திருப்பாள்,
அவள் தூய அன்பினிலே பிணைந்திருப்பாள்.

எல்லை இல்லா அன்பினை தந்திடுவாள்.
அவள் தொல்லை தரும் துன்பத்தை நீக்கிடுவாள்.

'பிள்ளை' என நம்பி நின்றாள்,
அவள் இல்லை என சொல்லாது காத்திடுவாள்.

கல்லையும் கனியாகி காட்டிடுவாள்,
அவள் புல்லையும் மரமாக்கி சிரித்திடுவாள்.

சொல்லையும் கவிதையாக மாற்றிடுவாள்,
அவள் முல்லை சிரிப்பினிலே நம்மை கவியாக்கி
வளர்த்திடுவாள்.

யார் அவள்? நமதருமை 'கலைமகள்!'

பணிவோம் அவள் பாதம்,
பெறுவோம் பல்கலை ஞானம்!."

💐 🙏🙏🙏🙏🙏🙏 💐

எழுதியவர் : (14-Oct-21, 11:56 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 144

மேலே