இரண்டுபட்டு போனது

மண்ணில் பிறப்பெடுத்து
மக்களை இகழ்ந்தாலும்
உற்ற உறவையும், நட்பையும்
ஒருபோதும் ஒதுக்காதீர்கள்
ஆழ உழுத நிலம்போல –மகிழ்வை
அள்ளி தரும் நிறைவோடு

சந்தேகக் கண்ணோடு
சண்டையிட்டுக் கொண்டால்
சொந்தங்களும், நட்புகளும்
சொல்லாமல் விலகும்,
சந்தோஷம் பறிபோகும்
சிதைந்துவிடும் வாழ்க்கை

நாட்டில் நல்லவர்கள்
நலிவடைந்து போகும்போது
ஒன்றுபட்டு வாழ
ஒருவனும் உதவமாட்டான்
இயற்கையும், இறைவனும் கூட
இரண்டுபட்டு போனது.

எழுதியவர் : கோ. கணபதி. (14-Oct-21, 2:44 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 35

மேலே