என்னவள் என்காதலி

என்காதலி இவள் பார்வையில் இதுவரை
நான் காண்பது நிலவின் குளுமை
ஒருபோதும் இது அனலாய் மாறிட கூடாது
என்று என்மனதிற்கு நான் சொல்லுகின்றேன்
அவள் பேசும் தமிழ்மொழி கொஞ்சல்
அதில் கொஞ்சம் கெஞ்சல் கொஞ்சம் மிஞ்சளுண்டு
ரசித்தேன் அதில் மலைத்தேன் ருசி
இதோ தோகை மயில்போல் அவள்
ஆடி வரும் அழகு ரதியையும் தோற்கடிக்கும்
இறைவா இப்படியே தங்கிவிடவேண்டும்
இவள் அழகு இவளுள் மூப்பென்றும் எய்தாது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Oct-21, 4:17 pm)
பார்வை : 178

மேலே