மூங்கிற்பாய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நீர்க்கடுப்பு மெத்தவுறு நீடுபித்த மும்பெருகும்
ஆர்க்கும் அனலம் அதிகரிக்கும் - பார்க்குளுறை
கோங்கி னறியமுகைக் கொங்கை மலர்த்திருவே
மூங்கிலின் பாய்க்கு மொழி

- பதார்த்த குண சிந்தாமணி

இதில் துயில் கொண்டால் மூத்திரக் கிரீச்சரம், பித்த கோபம், வாதம், வெப்பம் இவை பெருகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Oct-21, 9:48 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே