அலட்சியம் வேண்டாம்
மனிதர்களே
கடந்து வந்த பாதையை
அவ்வப்போது
நினைத்துப்பாருங்கள் ..!!
உங்களை
கவிழ்த்தவர்கள் யார் ..??
கைகொடுத்து
தூக்கிவிட்டவர்கள் யார் ..??
என்பது நன்கு புரியும்
கவிழ்த்தவர்களிடம்
இடைவெளி விட்டு
நில்லுங்கள் ..!!
கைதூக்கி விட்டவர்களுக்கு
உதவி செய்ய வாய்ப்பு
கிடைக்க விட்டாலும்
பரவாயில்லை ..!!
அவர்களை அலட்சியம் செய்து
மறந்து விட வேண்டாம் ...!!
--கோவை சுபா