வேங்கைமரம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

குத்திருமல் வெட்டையொடு கூறுமுள மாந்தையிவை
எத்திசையும் வாரா திடையுங்காண் - சத்தியமாய்ப்
புண்ணிருமல் சீழொழுகற் போகு மலமிறங்குங்
கண்ணொளிரும் வேங்கைக்கும் காண்

- பதார்த்த குண சிந்தாமணி

இது வெள்ளைவீழ்ச்சி, உளமாந்தை, இரணம், காசம், சீழ்ப் பிரமேகம் ஆகியவற்றை நீக்கும்; கண்ணிற்கு ஒளியைத் தரும்; சீழுடன் கூடிய கழிச்சலை யுண்டாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Oct-21, 3:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே