கேள்வி பதில்
கேள்வி கேட்டால்
ஞானம் வளருமா
என்பது தெரியாது...!!
கேள்வி கேட்பவர்கள்
எல்லோரும்
அறிவாளிகள்
என்று எண்ணாதே..!!
கேட்ட கேள்விகளுக்கு
பதில் சொல்ல
தெரியாதவர்கள்
எல்லோரும்
முட்டாள்கள் என்றும்
எண்ணாதே...!!
மனிதர்களின்
வாழ்க்கையில்
சில கேள்விகளுக்கு
விடை தெரியாமல்
இருப்பதே நன்மை தரும்...!!
--கோவை சுபா