கருவேல் கொழுந்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கண்டாலு வின்றளிரைக் கல்லிரைத் துத்தயிரில்
உண்டாற்,பா ஷாணவெப்பம் ஓடுங்காண் - கண்டாவி
வந்தசிவப் பேகுமதை மாதர்,பா லாலரைத்து
வெந்தவடை கண்ணிலொத்த வே

- பதார்த்த குண சிந்தாமணி

இக்கொழுந்தைத் தயிரில் அரைத்துக் குடித்தால் பாஷாணவேகம் நீங்கும்; முலைப்பாலில் அரைத்து அடைதட்டி காய்ந்த சட்டியிலிட்டு வெதுப்பி அற்ப சூடாக ஒத்தடமிட்டால் கண்சிவப்பு மாறும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Oct-21, 8:20 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே