அத்திமரப் பட்டை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
வீறு கடுப்பிரத்தம் வெண்சீத ரத்தமொடு
நாறுவிர ணங்களெலாம் நாடாவாங் - கூறுங்கால்
அத்திதரு மேகம்போம் ஆயிழையே யெஞ்ஞான்றும்
அத்திப்பாற் பட்டைக்(கு) அறி
- பதார்த்த குண சிந்தாமணி
இதனால் ஆசனக்கடுப்பு, இரத்தப்போக்கு, சீத இரத்த பேதி, புண், தத்துப் பிரமேகம் ஆகியவை நீங்கும்