ஆடையெடுத்த தயிர்க் குணம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
ஆடையெ டுத்ததயி ரையமி ளைப்பறுக்கும்
நாடுகி ரீச்சரத்தை நாடவொட்டா - தாடொலியால்
உண்டாங் கிராணி யுறைமேகம் போக்கிவிடுந்
தண்டார் குழலணங்கே சாற்று
- பதார்த்த குண சிந்தாமணி
இது சிலேட்டும நோய்கள், ஆயாசம், மூத்திரக் கிரீச்சரம், வாதகிராணி, குஷ்ட ரோகம், மேகம் இவற்றைப் போக்கும்