நினைப்பக் கிடந்த தெவனுண்டாம் மேலை வினைப்பய னல்லாற் பிற – நாலடியார் 105
இன்னிசை வெண்பா
தினைத்துணைய ராகித்தந் தேசு(உ)ள் ளடக்கிப்
பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்;
நினைப்பக் கிடந்த தெவனுண்டாம் மேலை
வினைப்பய னல்லாற் பிற. 105
- பழவினை, நாலடியார்
பொருளுரை:
பனையளவினரான பெருமையுடையோர் சிலர் நாடோறும் பெருமை குறைந்து தினையளவினராய்ச் சிறுத்துத் தமது மேன்மையை உள்ளத்தில் அடக்கிக் கொண்டு உலகில் உயிர்பொறுத்து இருக்கின்றனர்;
இதற்குக் காரணம் முன்னை வினைப்பயனல்லால் வேறு கருதக் கிடந்தது யாதுண்டு!
கருத்து:
முன்னைத் தீவினை எத்தகைய பெரியோரையும் உருத்து வருத்தும்.
விளக்கம்:
தினை பனை யென்னும் அளவுகள் கண்ணியங் கருதின.
எவனுண்டாம் என்பதில், ‘ஆம்' அசைநிலை. பிற, வேறு என்னும் பொருட்டு,
தேசு என்பது மேன்மைப் பொருட்டாதல்