பஞ்சவர்க்கம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

ஆலரசு சம்புடனே யத்திகுரு வேலவற்றின்
தோலைந்தும் பஞ்சவற்கந் தொல்லுலகில் - ஏலுமதால்
காசஞ் சுவாசங் கபங்கொங்கை வித்திரதி
நாசமுறு மென்றே நவில்

- பதார்த்த குண சிந்தாமணி

ஆல், அரசு, நாவல், அத்தி, இத்தி என்ற ஐந்து மரங்களின் பட்டைகளும் இருமல், இளைப்பு, சிலேட்டுமம், கொங்கைக் கட்டி ஆகியவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Oct-21, 10:50 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே