பஞ்சவர்க்கம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
ஆலரசு சம்புடனே யத்திகுரு வேலவற்றின்
தோலைந்தும் பஞ்சவற்கந் தொல்லுலகில் - ஏலுமதால்
காசஞ் சுவாசங் கபங்கொங்கை வித்திரதி
நாசமுறு மென்றே நவில்
- பதார்த்த குண சிந்தாமணி
ஆல், அரசு, நாவல், அத்தி, இத்தி என்ற ஐந்து மரங்களின் பட்டைகளும் இருமல், இளைப்பு, சிலேட்டுமம், கொங்கைக் கட்டி ஆகியவை நீங்கும்