அறத்துணையோடு ஏகமா நண்பொன்று மில் – அறநெறிச்சாரம் 13

நேரிசை வெண்பா

தனக்குத் துணையாகித் தன்னை விளக்கி
இனத்துள் இறைமையுஞ் செய்து -- மனக்கினிய
போகந் தருதலால் பொன்னே! அறத்துணையோ(டு)
ஏகமா நண்பொன்று மில் 13

- அறநெறிச்சாரம்

பொருளுரை):

இலக்குமி போன்றவளே! அறஞ்செய்வதாவது செய்தவனுக்கு இம்மை மறுமைகளில் துணையாக நின்று, அவனைப் பலரும் அறியுமாறு செய்து, சுற்றத்தார் பலருக்கும் தலைவனாகவும் செய்து, மனதிற்கினிமையான செல்வத்தினையுங் கொடுப்பதால் அறமாகிய துணையோடு ஒன்றாக வைத்தெண்ணுதற் குரிய நட்பினர் ஒருவரும் இல்லை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Oct-21, 12:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே