கெடுவது காட்டுங் குறி - நீதிநெறி விளக்கம் 35

நேரிசை வெண்பா

நட்புப் பிரித்தல் பகைநட்டல் ஒற்றிகழ்தல்
பக்கத்தார் யாரையும் ஐயுறுதல் - தக்கார்
நெடுமொழி கோறல் குணம்பிறி தாதல்
கெடுவது காட்டுங் குறி. 35

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

நண்பர்களைப் பகையாக்கிக் கொள்ளலும், பகைவர்களை நட்பாக்கிக் கொள்ளலும்,

வேவுகாரர்களை இழித்துரைத்தலும், பக்கத்திலுள்ள எல்லாரிடத்தினும் ஐயுறவு கொள்ளலும்,

பெரியோர்களுடைய அறிவுரைகளை மீறலும், இயல்பான தன்மைக்கு மாறாதலும் ஆகிய இந்த ஆறு பொருந்தாத செயல்களும் பின்னால் வரும் கெடுதிகளைக் காட்டும் அடையாளங்களாம்.

விளக்கம்:

நட்பு, பகை: அவை தம்முடையாரை உணர்த்தின;

ஒற்று: எல்லாரிடத்தும் ஒன்றியிருப்பாரை உணர்த்திற்று.

நெடுமொழி - பெருமையுடைய மொழி; அறிவுரை, நட்புப் பிரித்தல் முதலிய ஆறையும் உடையார்க்குக் கேடு வரும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Oct-21, 8:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 130

சிறந்த கட்டுரைகள்

மேலே