பாவத்தை சுமந்து நிற்பான்

நிலத்தில் விளையும்
நெற்பயிர்கள் முதிர்ந்தால்
கதிர்கள் தலை கவிழும்,
காய்கள் முற்றினால்
கொடிகள் வளையும்,
பால் பெருகினால்
பசுவின் மடி இறங்கும்

மண்ணில் வாழும் மாந்தரில்
முறையாகக் கற்றறிந்தவன்
மானத்தோடு வாழ்வான்
பண்பு நிறைந்தவன்
பணிந்து வாழ்வான்,
பண்பும், அறிவும் இல்லாதவன்
பழி, பாவம் சுமந்து நிற்பான்

எழுதியவர் : கோ. கணபதி. (27-Oct-21, 1:15 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 48

மேலே