அறக்கதிர் ஈன்றதோர் பைங்கூழ் சிறுகாலைச் செய் – அறநெறிச்சாரம் 16

இன்னிசை வெண்பா

இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக
வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய் 16

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

இனியசொல்லே விளை நிலமாகவும், ஈகையே விதையாகவும், கடுஞ்சொல்லாகிய களை பிடுங்கி,

உண்மையாகிய எருவிட்டு அன்பாகிய நீரைப் பாய்ச்சி அறமாகிய கதிரை ஈனுவதாகிய ஒப்பற்ற பசிய பயிரை இளம்பருவத்திலேயே செய்வாயாக எனப்படுகிறது

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Nov-21, 2:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 66

மேலே