அறக்கதிர் ஈன்றதோர் பைங்கூழ் சிறுகாலைச் செய் – அறநெறிச்சாரம் 16
இன்னிசை வெண்பா
இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக
வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய் 16
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
இனியசொல்லே விளை நிலமாகவும், ஈகையே விதையாகவும், கடுஞ்சொல்லாகிய களை பிடுங்கி,
உண்மையாகிய எருவிட்டு அன்பாகிய நீரைப் பாய்ச்சி அறமாகிய கதிரை ஈனுவதாகிய ஒப்பற்ற பசிய பயிரை இளம்பருவத்திலேயே செய்வாயாக எனப்படுகிறது