பிரிவோம் சந்திப்போம்

பிரிவோம் சந்திப்போம்
கவித்துவம் நிறைந்த
வார்த்தைகள் ...!!

பள்ளியிலும் ..கல்லூரியிலும்
இறுதியாண்டு பிரிவு விழாவில்
சிலர் சிரித்தபடியும்
சிலர் அழுகையுடனும்
சொல்லிக்கொண்டு
பிரிந்து செல்வார்கள் ...!!

அதுபோல்தான் ...வாசகர்களே
நானும் இலக்கிய உலகத்தில்
இருந்து நீண்ட ...நீண்ட ...நெடிய
வருடங்கள் பிரிந்திருந்தேன்

எழுத்து,காம் இணைய தளம்
எனக்கு பாலம் அமைத்து கொடுத்து
எனது எழுத்தின் மூலம்
இலக்கிய வாசகர்களை
மீண்டும் சந்திக்கும் வாய்ப்பை
ஏற்படுத்தி கொடுத்துள்ளது ..
.
எழுத்து.காம் இணைய தளத்திற்கு
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கம்.

ஜூலை திங்கள் 2020 --ம் ஆண்டு
தொடங்கி இன்றுவரை தினமும்
இலக்கிய வாசகர்களை எனது
கவிதையின் வாயிலாக சந்தித்து
வருகிறேன் ..மனதுக்கு மிகவும்
மகிழ்ச்சியாக இருக்கின்றது ..

மேலும் ..இன்று வரை ஐந்தாயிரம்
பார்வையாளர்கள் எனது கவிதைகளை
வாசித்துயுள்ளார்கள் என்பதை அறியும் போது
மனதிற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது .

தடைகள் இன்றி எனது இலக்கிய பயணம் தொடர்வதற்கு
உங்களது அன்பையும் ஆதரவையும் வேண்டி
விரும்பும் கலைஞன் ....

வாழ்த்துக்கள் ...வாழ்க நலமுடன் ...

உங்கள் கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (4-Nov-21, 12:29 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 112

மேலே