புன்னகை முகம்
பூந்தோட்டத்தில் காலையில்
"புன்னகை"
கொண்ட முகம் போல்
பூத்த மலர்கள் எல்லாம்
அந்தி நேரம் வந்தால் தான்
வாடிப்போகும்...!!
ஆனால்...
இன்றோ
என் இனியவளே
"புன்னகை" முகத்துடன்
நீ பூந்தோட்டத்திற்கு
வருகை தந்தவுடன்
பூக்கள் எல்லாம் ஒன்றுக்கூடி
உந்தன் "புன்னகை" முன்னால்
தங்களது "புன்னகை"
ஒன்றுமில்லை என்று
வருத்தம் கொண்டு
காலை நேரத்திலேயே
வாடிப்போய் விட்டதே ..!!
--கோவை சுபா