பொறுமை கடலினும் பெரிது

உன்னுடைய வாழ்க்கையில் உனக்கு கிடைத்த வாய்ப்பை
இன்னொருவன் தட்டிப்பறித்தானா கவலைப்படாதே
உன்னுடைய உதவியால் முன்னேறியவன் உன்னை
உதாசீனப்படுத்தினால் கவலைப்படாதே
நீ நம்பியவன் உன்னை ஏமாற்றி முன்னேறினா கவலைப்படாதே
உன் உறவுகள் உன்னை அவமானப்படுத்தி அவமதித்து
துன்பப்படுத்தினார்களா கவலைப்படாதே
வாழ்வில் வரும் சோதனைகளையும் துன்பங்களையும்
பொறுத்துக்கொண்டு காத்திரு கண்டிப்பாக ஆண்டவன்
உன் வாழ்க்கை முடிவதற்குள் உன்னை உயர்த்துவார்.
ஏன் மேகம் இருள் சூழ்ந்ததால் தினமும் உதிக்கக்கூடிய
சூரியனும், நிலவும் கூட உதிக்க முடியாது. காத்துதான்
இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இந்த உலகில்
நீயும் நானும் எம்மாத்திரம்.

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (12-Nov-21, 3:59 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 175

மேலே