காதலின் முதல் விதி

நீ தொலைவில் இருந்தால்
இதயம் எரிகிறது.
நீ அருகில் இருந்தால்
இமயம் உருகிறது.
நீ தொலைவில் இருந்தால்
தென்றல் சுடுகிறது.
நீ அருகில் இருந்தால்
புயலும் புன்சிரிக்கிறது.
நீ தொலைவில் இருந்தால்
இன்பங்கள் துன்பமாகிறது.
நீ அருகில் இருந்தால்
துன்பங்கள் இன்பமாகிறது.
நீ தொலைவில் இருந்தால் நான் தொலைந்து போகிறேன்.
நீ அருகில் இருந்தால்
உனக்குள் என்னை காண்கிறேன்.
கண் திறந்துப் பார்த்தால்
காண்பவையெல்லாம் உன் உருவம்.
கண் மூடிப் பார்த்தால்
நெஞ்சுக்குள் உன் உருவம்.
நீ நானாவதும்
நான் நீயாவதும்
காதலின் முதல் விதி!

எழுதியவர் : (16-Nov-21, 4:51 pm)
சேர்த்தது : பிரதீப்
பார்வை : 128

மேலே