அறம்புரிந் தாற்றுவ செய்யாது நாளும் உறங்குதல் காரண மென்னை – அறநெறிச்சாரம் 26
நேரிசை வெண்பா
அறம்புரிந் தாற்றுவ செய்யாது நாளும்
உறங்குதல் காரண மென்னை? - மறந்தொருவன்
நாட்டு விடக்கூர்தி அச்சிறுங் காலத்துக்
கூட்டுந் திறமின்மை யால் 26
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
நான்முகன் படைத்த இறைச்சியாலாகிய வாகனம் (உடல்) அச்சொடிந்து உயிர் பிரிந்து அழியுங் காலத்தில் அதனைப் பொருத்தி நடத்தும் தன்மை இன்றாகவும்,
அறத்தினை விரும்பி இயன்ற அளவு செய்யாமல் மறந்து போதலால்
எப்பொழுதும் காலத்தை வீணே கழித்தல் நெஞ்சே! என்ன காரணம்?
குறிப்பு:
அச்சு - உயிர்; ஊர்தியாகிய உடலின் ஆதரவான பாகம்.