போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே கூற்றங் கொண்டோடும் பொழுது - நாலடியார் 120
நேரிசை வெண்பா
(’ஞ்’ ‘ங்’ மெல்லின எதுகை)
தாஞ்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்
(றி)யாங்கணும் தேரின் பிறிதில்லை: - ஆங்குத்தாம்
போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே,
கூற்றங்கொண் டோடும் பொழுது 120
- மெய்ம்மை, நாலடியார்
பொருளுரை:
ஆராய்ந்தால், தாம் செய்த நல்வினை தீவினைகளல்லாமல் தம் உயிரோடு துணை வருவது எப்பிறவியிலும் பிறிதெதுவுமில்லை,
கூற்றுவன் உயிரைப் பிரித்தெடுத்துக் கொண்டு செல்லும் பொழுது அதுகாறும் தாம் பாதுகாத்து அழகுகள் செய்து கொண்ட உடம்பும் அவ்வாறே பயனின்றாயிற்று.
கருத்து:
செல்லுங் கதிக்கு உறுதுணையாக நல்வினைகள் செய்துகொள்ளல் வேண்டும்.
விளக்கம்:
ஆங்கு, பிறிதெதுவும் துணை வராதது போல என்னும் பொருட்டு;.
போற்றிப் புனைந்தவென்பது, அச்செயல்களினும் புண்ணியம் ஈட்டுஞ் செயல் முதன்மையான தென்னுங் குறிப்பிற்று