கனவினில் கண்டவள் எதிரில்

தரவு கொச்சகக் கலிப்பா

மனசெல்லாம் பனித்தூவ இதயமும் இன்னிசைக்க
கனவினில் கண்டவளோ கண்முன்னே வந்துநின்றாள்
இனிக்கின்ற பழக்கலவை பசியினை நீக்கியதாய்
இனியதான பார்வையினால் நல்லாற்றல் கொடுத்தாளே ----- (1)

பருவப்பெண் பார்வையால் உள்ளமும் பொங்கிடவே
உருவமும் ஓங்கிடவே உலகமும் சிறுத்துவிட
அருமையான நினைவுகளால் அந்தரத்தில் மிதந்தபடி
பெருமையான உணர்வுகளால் காதலுள் சென்றேனே ----- (2)

சுருக்கென ஓருணர்வு சுத்தியால் அடித்ததாய்
இருதயத்தில் இறங்கியது இருமூளையும் கலங்கியது
வருமுன்னே மின்னுகிற இடியைப்போல் இருந்ததுவே
தருகின்ற வள்ளலாய் தாரகையும் தெரிந்தாளே. ----- (3)

காற்றைவிட இதமான பார்வையாலே எனைப்பார்க்க
ஆற்றலின் ஊற்றெனவே பெரியஈர்ப்பு இதயத்திலே
போற்றுகின்ற வகையினிலே உச்சரித்தேன் அவள்பெயரை
கூற்றினைக் கேட்டவளும் கொஞ்சினாளே நெருங்கியே ----- (4)
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (24-Nov-21, 9:35 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 57

மேலே