காதல் இல்லா
காதல் இல்லா.....
காதல் இல்லையேல்
சாதல்!
என்றானே
எவனொருவன்?
அவன் யோசித்தானோ
சில நிமிடம்.
எழுதிய போது,
எங்கிருந்தான் அவன்?
உழைப்பு இல்லையேல்
சாதல்,
உழவன் இல்லேயேல்
சாதல்,
என்றிருந்தால்!
காதல் இல்லா
தமிழ்ப் படம் பார்த்து
மகிழ்ந்திருப்பேன்,
உலகமும் பார்த்து
மகிழ்ந்திருக்கும்,
தமிழகமும்
உய்ந்திருக்கும்.
ஆக்கம்
சண்டியூர் பாலன.