அறநூலால் அறியவேண்டிய ஆறு பொருள்கள் – அறநெறிச்சாரம் 38
நேரிசை வெண்பா
தலைமகனும் நூலும் முனியும் பொருளும்
தொலைவின் றுணிவொடு பக்கம் - மலைவின்றி
நாட்டியிவ் வாறும் உரைப்பரே நன்னெறியைக்
காட்டி யறமுரைப் பார் 38
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
ஒழுக்க நெறியினை விளக்கி அறநூலை உணர்த்துவோர் அருகனும் மெய்ந்நூலும், துறவியும், உண்மைப் பொருளும் அழிவின் துணிவையும், அருகனிடத்தன்பும் இவ்வாறு பொருள்களையும் மாறுபாடு அற்றனவாக நிலைநிறுத்திச் சொல்லுவார்.
குறிப்பு:
தொலைவின் துணிவு - அழிவின் நிச்சயம்