ஒரு அபலையின் கூக்குரல்

நீதானே எந்தன் கனவு கன்னி
நீதானே எந்தன் உயிரும் உலகுமெல்லாம்
என்றெல்லாம் நேற்றுவரைக் கூறி வந்தநீ
இன்றோ என்முகம் காணவும் வெறுக்கிறாய்நீ
கரும்புரசமும் பாவற்காய்ப் போல இப்படி
கசந்ததேனோ நானறியேனே கரணம் சொல்வாயா
என்மீது தவறிருந்தால் என்னை நான் திருத்திக்கொள்ள
இப்படி ஏதோ வெறுப்பால் காதலித்து வளர்த்த
நம் நல்வாழ்வை நாமே வீணாக்கிடலாமா
இதுவே இந்த அபலையின் கூக்குரல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (30-Nov-21, 8:25 pm)
பார்வை : 41

மேலே