புன்னகையை வீசிச் செல்லும் செவ்விதழ் ஓவியமே
சிலைசெய் திடநினைப்பான் சிற்பிஉன் சித்திர விழிகள் பார்த்து
கலைவடிவம் தந்திட கண்ணுறங் காமல் தீட்டுவான் ஓவியன்
விலையிலாப் புன்னகையை வீசிச் செல்லும் செவ்விதழ் ஓவியமே
கலைந்தாடும் கூந்தல் வழிக்காதல் தூது விடுகின் றாயோ !