எயிட்ஸ் குறள்

எயிட்ஸ் குறள்
===============
இல்லாதா னாயினும் இல்லாளை நேசிப்பின்
பொல்லாநோ யண்டாது போ
*
போகும் வழிநின்றுப் புன்னகைக்கும் நோய்க்காரி
சாகும் வரங்கொடுக்கச் சான்று
*
சான்றுக லின்றியே சாக்கடை வீழ்ந்திட
ஊன்றிடும் நோய்த்தொற்று ஊறு
**
ஊறுவிளை விக்கின்ற உல்லாசத் துள்சிக்கி
நாறுமுனை நோக்காதே நாய்
**
நாய்க்குணம் விட்டுந்தன் நற்பண்பைக் காப்பாற்றி
தாய்மையைப் போற்றுத் தகும்
**
தகாத உறவால் தலைகுனியும் உந்தன்
முகாரிக் கில்லை மருந்து
**
மருந்திலா நோயை மறைமுக மாய்நீ
விருந்தென வாங்கல் விடு.
*
விடுமுறை நாளை விருப்புடன் போக்க
கெடுவழிச் செல்லாதே கேள்
**
டிசம்பர் 1 உலக எயிட்ஸ் தினம்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (1-Dec-21, 1:59 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 50

மேலே