காதல் முத்தம்
காத்திருந்த அவள் குவிந்த செவ்விதழ்
காதலன் வருகைக் கண்டு அலர்ந்ததுவே
தடாகத் தாமரைப்போல்; இதழோரம் சிந்தும்
ஊரும் காதல் தேனைக் கண்டு கொண்டானோ
அவன் காதலி அவளை நெருங்கி
கட்டி அணைத்து முத்துமாரி பொழிந்திடான்
காதலின் காமத்துப்பால் ஆங்குருவாக