பெண்களின் கோபம்

கலிவிருத்தம்

பெண்கள் ஈட்டிடும் திரவியக் காரணத்தால்
வண்மையின் தன்மை குறைந்து வன்மையில்
பெண்மையும் மிடுக்காய் கோலோச்சிட குடும்பம்
உண்மையில் குன்றுது சிறந்த வளத்தையே ----- (1)

பெற்றோர் தம்முடன் பிறந்தோர் எனவும்
உற்றார் உறவினர் உள்ளம் விரும்புவோர்
பற்றோர் பண்போர் பலநிலை நண்பர்
மற்றவர் எவரையும் மதிப்பதும் இல்லையே ----- (2)

குடும்ப வேலையை தினமுமே புறந்தள்ளி
நடுங்கிடும் வகையில் பெற்றோரை ஏசியே
அடங்கா பாவையாய் அடர்வு கோபத்தில்
அடக்கியே எவரையும் விரட்டும் பெண்ணாய் ----- (3)

பணிபுரிந் திடும்பெண் டீரும் இன்று
அணிந்தே செல்கின் றனரே கோபத்தை
மணமுடித் தநிலையில் வெகுவில் வெம்மையாய்
பிணியிலே அமிழ்த்தும் என்றதை அறியாமலே ----- (4)

மங்கையர் பணியினால் திரவியம் ஈட்டினும்
தங்களின் குடும்பத்தை காப்பது கடமையே
திங்களாய் கரைவதும் வளர்வதும் இயற்கையே
பங்கமாய் குடும்பத்தை நினைத்தால் அல்லலே. ----- (5)
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (1-Dec-21, 10:35 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 156

மேலே