செத்வனுக்கும் பிறந்த நாள்

இமயத்தின் பனிமலையில் இந்திய எல்லையில் சொற்ப உணவு உண்டு
பாதுகாவல் பணிக்காக உயிரையேத் தியாகம் செய்துகொண்டு நிற்கும் வீரர் பற்றி
என்றாவது தமிழ்நாட்டு கட்சியும் கழகமும் பேசியதோ பாராட்டியதோ இன்றுவரைக்
கிடையாது. அவர்கள் பேசுவதோ தமிழ் தமிழ் தமிழன் இலங்கைத் தமிழரைப் பற்றியே..
உண்மையில் இந்த அரசியல் தலைகள் வெளிமாநில மக்களே. எதைப் பற்றியும்
கவலைப்படாத இந்த கிழங்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுவது எதற்கு. மானங் கெட்ட
அடிவருடிகள். நாட்டின் மானம் காக்க இறந்தவனுக்காக வேண்டுமென்றால் துக்க
நாள் கொண்டாடலாம். நாட்டை நாசமக்கி செத்தவனுக்கும் பிறந்தநாள் கொண்டாட்டம்
தேவையா ? சொல்லுங்கள் ?

கலக்கமின்றிய வரும் மலையில்
உயிரும்பண யமாம்பனி. நடு
உணவின்றிநிற் பவர்குடி தொலை
நிலையறிவிலி குடி கும்மாளம்

எல்லை பணிக்கு இமயத்தின் உச்சிமீது
தொல்லைநீங்க ஏந்துகின்றார் துப்பாக்கி
சண்டாளக் கும்பலுடன் கட்சி கிழமோ பிறந்தநாள்
கொண்டாடித் தின்னும் குடித்து

சீனா லடாக்கரு ணாசலம் பிடித்தால்
எனக்கென்ன பாக்கும் பங்களா வெல்லாம்
வடக்கைப் பிடித்தால் எனக்கொன்றும் கிடையாது
இலங்கையில் அமெரிக்கா சைனாக்கப்பல்கள்
நின்றால் எனக்கென்ன வெள்ளம் சூழ்ந்தால்
எனக்கென்ன நாடு எக்கேடும் கெட்டிட
எனக்கென்ன கிறுக்கிடுவேன் காதல்
பாட்டென்று கிறுக்குவேன் நீயும் கேட்காதே




.........

எழுதியவர் : பழனி ராஜன் (3-Dec-21, 7:25 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 29

சிறந்த கட்டுரைகள்

மேலே