நானிங்கு இருப்பதை கண்டும்காணாமல் செல்வதோ

வானவெளி அரங்கில் வட்டமிடும் வெண்ணிலாமுகம்
தேனின்துளிகள் சிந்திக்கிடக் கும்செவ்விதழ் கிண்ணம்
மானின்விழி தேனமுதுச் செந்தமிழ் பூவே
நானிங்கு இருப்பதை கண்டும்காணா மல்செல்வதோ !

பூவே என்று விளித்ததால்

தேனின்துளிகள்----தேமா நறும்பூ

கண்டும்காணா---தேமா தண்பூ
---எனும் நாலசை பூச்சீரால் இலக்கண இலக்கிய அழகு
பெறுகிறது

எழுதியவர் : கவின் சாரலன் (4-Dec-21, 10:17 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 44

மேலே