இறைவன்

உன்னுள் என்னுள் நம்முள் ஒருவன்
உள்ளான் அவனே இறைவன் என்பதை
அறிந்துகொண்டால் நீயே ஞானி யாவாய்
இதற்கு அறிந்தபின்னே வேள்வி எதற்கு
உடம்பை வருத்தும் தவமும் எதற்கு
நீ உடம்பல்ல உடலில் உறையும் ஆன்மா
ஆன்மாவிற்குள் உறையும் 'அவன்' இறைவன்
என்பதே 'கீதாசாரம்' இதை அறிவோம்
தெளிவோம் மண்ணிலே விண்ணைக் காண்போம்
நம் ஆவார்கள் தெளிவுபடுத்துவதும் இதுவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (6-Dec-21, 10:26 am)
Tanglish : iraivan
பார்வை : 77

மேலே