மலரடி சரணம்

"மலர் போன்ற மனம்
கொண்ட தாயே,
துன்ப இருள் தன்னில்
எனை காக்காக
வர வேண்டும் நீயே,

"மலர் போன்ற மனம்
கொண்ட தாயே,

1. உணராத வாழ்வு என்றும் வீணே,
நிலை பெயராது உன் அன்பு
ஒன்றுதான் தேனே,

மலராத இவ்வாழ்வில் நானே,
தினம் உதிராமல் காக்கவே
ஓடி நீ வாயேன்.

"மலர் போன்ற மனம்
கொண்ட தாயே,

2. ஓயாது நினைத்தேனே
உனையே,
இது போறாது என்று நீ
தள்ளுவாயோ எனையே,

அயராது துதிப்பேனே
நினையே,
இனி உயராது போவேனோ
சொல்லடி தாயே.

"மலர் போன்ற மனம்
கொண்ட தாயே, "

எழுதியவர் : (7-Dec-21, 11:38 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 177

மேலே