வசீகரக் கவி

அநீதி எதிர்க்க அக்னி வரி...
மனிதம் வளர்க்க அமுத வரி..
அமுதும் தேனும் ஊறும் வரிக்கு வரி
அதுதான் மகாகவி பாரதி...

ஆடுவோமே... பள்ளுப் பாடுவோமே...
ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டோமென்று...
விடுதலைக்கு முன்பே
அதனைக் கொண்டாடி மகிழ்ந்து
முப்பத்தொன்பதுக்குள் முந்நூறு
வருடம் நேர்த்தியுடன் வாழ்ந்து முழுமை
பெற்றுக் கொண்டாய் நீ பாரதி...

எங்கள் வசீகரக் கவி பாரதி...
மூவாயிரம் ஆண்டுகள் தாண்டியும்
உன் தமிழ் இனிக்கும்...
உன் புகழ் நிலைக்கும்...
🙏🌹💐👍👏🌺🌸

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (11-Dec-21, 11:53 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 219

மேலே