அறவுரையை மாட்சி புரிந்த மதியுடையாளரே கேட்பர் கெழுமி யிருந்து – அறநெறிச்சாரம் 49

நேரிசை வெண்பா

அற்றறிந்த காரணத்தை ஆராய்ந் தறவுரையைக்
கற்றறிந்த மாந்தர் உரைப்பவே - மற்றதனை
மாட்சி புரிந்த மதியுடை யாளரே
கேட்பர் கெழுமி யிருந்து 49

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

மெய்ப்பொருளைக் கற்றுத் தெளிந்த மாந்தர் பற்றற்றுத் துறந்து அறியவேண்டிய மெய்ந் நூல்களை அறியும் காரணத்தையும் அறப் பொருளையும் ஆராய்ச்சி செய்து உரைப்பர். அவ்வுரையை நற்குணமிக்க அறிவுடையவர்களே உளமிசைந்து உரிமையுடன் கேட்பராவர்

குறிப்பு: அறுதல் - பற்றொழிதல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Dec-21, 12:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே