நூலும் பொருளும் ஒருவாது கண்டு கயக்கறத் தேர்ந்தபின் வீ டேற்க வறம் – அறநெறிச்சாரம் 50

நேரிசை வெண்பா

உருவும் ஒழுக்கமும் நூலும் பொருளும்
பொருவில் தலைமகனோ டின்ன - ஒருவாது
கண்டு கருதிக் கயக்கறத் தேர்ந்தபின்
கொண்டுவீ டேற்க வறம் 50

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

வடிவமும், நன்னடக்கையும், உரைக்கும் நூலும், அந்நூலுட் கூறப்படும் பொருளும் ஒப்பில்லாதுயர்ந்த இறைவனுமாகிய இவற்றை நீங்காது ஆராய்ந்து சிந்தித்து கலக்கமில்லாது உணர்ந்த பின்னர் அறத்தினை மேற்கொண்டு முத்தியை அடைய முயல்க.

குறிப்பு:

உருவு - தொலைப் பொருள்களின் வடிவினையுணருங் காட்சியறிவு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Dec-21, 12:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

மேலே