வரட்டா

கண்ணே!... உன்

நெற்றி பொட்டாக இருந்து
விடட்டா ?
வேண்டாம்!.....
வியர்வை பட்டு கலைந்து
விடுவேன்!

மல்லி மொட்டாக உன் கூந்தலில்
இருந்து விடட்டா ?
வேண்டாம்!......
ஒரே நாளில் உதிர்ந்து விடுவேன்!

உன் பட்டு உடையாக இருந்து
விடட்டா ?
வேண்டாம்!......
அழுக்காகி விலகி விடுவேன்!

மாட்டும் காதணியாக இருந்து
விடட்டா ?
வேண்டாம்!....
நீ மாற்றினால் கழன்று விடுவேன்!

ஒட்டும் காலணியாக இருந்து
விடட்டா ?
வேண்டாம்!.....
வாசலோடு இருந்து விடுவேன்!

வெளியே இருப்பது எதுவும்
வேலைக்கு ஆவாது போல,

உன் கண்ணில் நுழைந்து,
மனத்தில் குழைந்து,
உயிரில் கலந்து விடட்டா ?

என்றென்றும் உன்னுடனேயே
இருந்து விடுவேன் .

நெருங்கி வரட்டா? "

எழுதியவர் : (27-Dec-21, 6:25 pm)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 98

மேலே