தீந்தமிழ் இலக்கியம் மறையும்
நேரிசை வெண்பா
அருமைத் தெளிதமிழே மாணிக்க வாசன்
திருவாச கம்தமிழில் லையா -- உருசெய்
திருஞானம் சுந்தர் திருநாத்தே வாரம்
அருந்தமி ழன்றாப் பகர்
ஆசிரியப்பா
பெரிய காஞசித் தனிகைப் புராணம்
அரிய ஆசா ரக்கோர் வையும்
திருப்பா வைத்திரு வெம்பா வெல்லாம்
திருப்புகழ் இராமலிங் கனார்பட் டினத்தார்
சமய குரவர்கள், சைவம் வளர்த்தோர்
பன்னி ரெண்டாழ் வார்நூல்
தீந்தமிழ் இலக்கியத் திலேசே ராவோ
தமிழை மறந்து கோழை களாகவே
அடுப்பை சுற்றி விட்டப் கோழியாய்
பெரியார் பின்னும் அண்ணா பின்னும்
சிறியார் போல ஓடுவ தேனோ
முதலில் சொல்லும் நீயும் தமிழனா
கார்த்திகை நாயாய் நீயும்
அவரின் பின்னே ஒடுவ தேனோ
.........
......