நமசிவாயம்

மாண்புமிகு அமைச்சர் நமச்சிவாயம் அவர்களுக்கு வாழ்த்துக்கவி

கடவுள் நமச்சிவாயத்திர்க்கும்
உங்களுக்கும் உள்ள ஒற்றுமை


அவர் கோயில் கருவறையில்
பிறந்தவர்
நீயோ தாயின் கருவறையில்
பிறந்தவர்

அவர் ஆண்டவர்
நீயோ ஆளப் போகின்றவர்

ரங்கசாமி அவருக்கு மாமா
உனக்கும் அவர் மாமா

நீங்கள் திமுகவில் மலராது பாஜகவில் மலர்ந்த அண்ணா
எங்களைப்போன்ற தம்பிகளுக்கு நீர் ஒருவர் தான் உடன்பிறவா அண்ணா

நீர் மக்களுக்கு உதவி உதவி சிறிய மண்ணாய் இருந்த உன்புகழ் ஆனது விண்ணா
அதனால்தான் நீர் எந்த தொகுதியில் நின்றாலும் ஆகின்றாய் வின்னா


சிலர் நினைத்தார்கள் நீர் அரசியலில்
போக வேண்டும் என்று மண்ணா
ஆனால் நீர் மண்ணாடிப்பட்டு தொகுதியை
வென்று மன்னன் ஆகிப்போன மன்னா

கண்ணா பின்னா என்று இருந்த
தொகுதியை
உன் நா
அச்
செந் நா
ஆணையிட்டு
மாற்றியது மக்கள் பார்க்கும் கண்ணா
ஏறியது ஏழைகள் விழாது தாங்கிப்பிடிக்கும் பின்னா

உம் பேச்சு எங்களை மயக்கும் ஜின்னா
நீர் பாக்கிஸ்தானில் பிறக்காது பாண்டிச்சேரியில் பிறந்த ஜின்னா

தடைகள் ஓடும் நீ முன்னால்
வந்து நின்னா
படைகள் கூடும் நீ பின்னால்
நிற்கச் சொன்னா

உன் பேச்சு யார் மனதையும் ஆகாது புண்ணா
உன்போல் ஒரு தலைவரை போற்றாது தூற்றும் நா அது புண் நா

உங்களைப் போற்றிப் பாட கொடுத்து வைத்திருக்கிறது என் பென் நா
உங்களோடு வாழ ஆசை
இறைவா என்னை அடுத்த பிறவியில் மாற்று பெண்ணா

Aathikesavanukkup பிறந்தாய்
சன்னா
நீர் புதுவையில் தாமரையை
பிறக்க வைத்தாய் சன்னா


திரியணையில் தீபம் அமரும்போது வெளிச்சம் உண்டாவதை போல்
நீர் அரியணையில் அமர்ந்தீர்
புதுவைக்கு வெளிச்சம் உண்டானது

நீர் மண வெளியில்
வாழ்ந்தாலும் எழை மக்கள் மனதிற்குள் வாழ்பவர்

நீங்கள் ஈகையினை
இரு கைகளாகக் கொண்டவர்
அதனால்
சட்டமன்றத்தில்
இருக்கையினை
செய்து வைததார் ஆண்டவர்

நீங்கள் ஆணையிட்டால்
அது நடந்துவிட்டால்
எளியோர்
மனம் வெந்து நோகுவாரா
ஏழைகள் வேதனைத் தீயில்
வேகுவாரா
சோதனை நோயில் சாகுவார
நீர்
ஏழைக்காக போராடப் பிறந்த
புதுவை சேகுவேரா


நீங்கள்
காமராஜரிடம் இருந்து
தெறித்த துகள்
கர்ண வள்ளலின் நகல்
ஏழைகளுக்கு ஒளி
கொடுக்கப் பிறந்த அகல்
இருண்ட
புதுச்சேரிக்கு
உங்களால்தான்
வரப்போகிறது
பகல்

உன் கைகள் கொஞ்சம்
குட்டையானது
ஏழைகள் கண்ணீர்
துடைப்பதில்
கைக்குட்டை
ஆனது

பாரி மாரி
ஓரி காரி
இவர்களுக்கு
எல்லாம் சொல்கிறேன் சாரி
ஏனென்றால்
நீங்கள் தானே
மாற்று திறனாளிகள் உடுத்தக் கொடுத்தீர் சாரி

அரசாங்கப் பணத்தை
எடுப்பவர்
அது ஏழைகளைச் சேராமல்
கெடுப்பவர்
தடுப்பவர்
மத்தியில்
நீங்கள்
மக்களுக்கு அள்ளிக்
கொடுப்பவர்

இந்தியப் பெருங்கடலாய்
உன் புகழ்
நீண்டு இருக்கட்டும்
இவ்வுலகை
ஆண்டு இருக்கட்டும்
அதற்குத் துணையாய்
இப் புத்தாண்டு இருக்கட்டும்

எழுதியவர் : குமார் (31-Dec-21, 2:44 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 139

மேலே