யார் இவளோ

யார் இவளோ
முன் பனியோ
இதுவரை காணாத
நிலவின் நிழலோ

கண் மலரோ
இமை கண் தேனோ
நெய்திரள் நரம்பில் எழும்
யாழின் இசையோ

பிடி படா வாரணம்
போல் இருந்தேனே

ஐம்புலனும் மறுகுறும்
நிலை என்ன

நான் தேடிடும் தீம்புனல் நீயே
நான் குளிர்ந்திடும் சந்தனம் நீயே

என் உயிரும் வினையும்
திணை மயங்குதே

எழுதியவர் : ராம்குமார் (6-Jan-22, 10:42 am)
சேர்த்தது : kavidhai yasagan
Tanglish : yaar ivalo
பார்வை : 274

மேலே