இழந்த பின்
காதலை இழந்த
கள்வன் நான்
கார் முகிலாக
வளர்ந்த காதலை
கரும்பை போல்
உடைத்தவனும் நானே
கன்னி அவள்
கழுத்து வரை வைத்த அன்பை
கசியும் உதிரமாக
நினைத்து நிறுத்தியவனும் நானே
காலத்தை கண்டு கவலை கொள்ள நான் இன்று
காதலை நினைத்து கண்ணீர் வடிக்கிறேன் கடல் என
இழந்தது ஒருவளை தான்
ஆனால் உயிர் வரை
அறுத்து சென்று விட்டாள்
இனி இழந்த பின் என்ன செய்வது