விரட்டுங்கள் அடித்து

ஒழுகிசை அகவல் ஓசை
உடைய நேரிசை ஆசிரியப்பா

கிறுக்க வந்தேன் என்ற கிறுக்கன்
கிறுக்கலில் பொறுக்கி உலக நடப்பு
அறியான் சாதி வேண்டா மென்பான்
சமத்து வமில்லை என்பான் மூடன்
திடீரென உருகுவான் பெண்ணின் உறுபில்
இரத்தம் என்பான் பாவம் என்பான்
ஆணை சதைக்கலை யும்பேய் என்பான்
உறுப்புக் கலையும் ஓநாய் என்பான்
ஒழுக்குண் டமகள் சும்மா இருக்க
ஒப்பா ரியொழுக் கிவனுக் கென்ன
தன்தங் கைபண் ணிரெண்டில் ஆடி
ஓடிக் கலைத்ததை சொல்லான் வீட்டு
ஒழுக்கை சொல்லான் பாவி கோயிலில்
ஒழுகுமா வெண்பான் தன்தாய் அக்காள்
ஒழுக்கு பற்றி பேசான்
கள்ளன் காளிபற் றிபேசல் ஏனோ




....

எழுதியவர் : பழனி ராஜன் (14-Jan-22, 8:16 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 77

மேலே