ஆக்க மழியினும் அல்லவை கூறாத தேர்ச்சி - இனியவை நாற்பது 28

இன்னிசை வெண்பா

ஆற்றானை யாற்றென் றலையாமை முன்இனிதே
கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே
ஆக்க மழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின் தேர்வினிய தில். 28

- இனியவை நாற்பது

பொருளுரை:

ஒரு செயலைச் செய்ய மாட்டாதவனை அதனைச் செய்யென்று வருத்தாமை மிக இனியது.

கூற்றம் வருவது உறுதி என்பதை சிந்தித்து தவறு செய்யாமல் வாழ்வது இனியது.

செல்வம் அழிந்தாலும் பாவச் சொற்களைச் சொல்லாத தெளிவினை விடச் சிறந்தது வேறெதுவுமில்லை.

தன் வலிமையினால் மட்டுமின்றி, தன்னிடம் கொண்டுள்ள அன்பினாலும் ஏவி வருத்தினாலும் வினை முடியாதாகலின் ‘ஆற்றானை யாற்றென் றலையாமை’ என்றார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jan-22, 11:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

மேலே