வாழ்க தெய்வ புலவர் புகழ்

" இரண்டு அடியில் உலகை
அளந்தவன் இறைவன்!
இரண்டு வரியில் உலகை
ஆண்டவன் வள்ளுவன்!.

உலகியல் உண்மையை
உரைத்த ஒரு குரல்,
உலகையே உயர்த்திய.
உன்னத திருக்குறள்!

வாழ்வு மணக்க வந்த
வள்ளுவன் வாழ்க!
தமிழ் இனிக்க அவர் தந்த
திருக்குறள் வாழ்க!."

எழுதியவர் : (15-Jan-22, 11:44 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 470

மேலே