ஆராய்ந்து அறிந்துரைத்தல் ஆற்ற இனிது - இனியவை நாற்பது 31

இன்னிசை வெண்பா

அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே
கடன்கொண்டுஞ் செய்வன செய்தல் இனிதே
சிறந்தமைந்த கேள்விய ராயினும் ஆராய்ந்து
அறிந்துரைத்தல் ஆற்ற இனிது. 31

- இனியவை நாற்பது

பொருளுரை:

தம்மிடம் அடைக்கலம் புகுந்தவர் துன்பம் மிகாதவாறு செய்யும் உதவி இனியது.

கடன் வாங்கியாவது செய்ய வேண்டிய செயல்களைச் செய்வது இனியது.

சிறப்பாகக் கற்றறிந்த நூலறிவை உடையவரானாலும் சொல்ல வேண்டியதை ஆராய்ந்தறிந்தே ஒன்றைச் சொல்வது மிக இனியது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jan-22, 2:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

சிறந்த கட்டுரைகள்

மேலே