பேய்ச்சுரை வேர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கடுவேறு பேய்ச்சுரைவேர் கண்டால் அரவின்
கடுவேறா துண்மைமுக் காலுங் - கொடுவிஷமும்
ஈளை யிருமலும்விட் டேகுமுண்டால் வாந்தியுண்டாம்
வாளையுறுங் கண்ணாய் வழுத்து

- பதார்த்த குண சிந்தாமணி

இது பாம்பின் விடங்கள், கோழை காசம், இருமல் இவற்றை நீக்கும் .வாந்தியை உண்டாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Jan-22, 8:51 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே