பேய்ச்சுரை வேர் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கடுவேறு பேய்ச்சுரைவேர் கண்டால் அரவின்
கடுவேறா துண்மைமுக் காலுங் - கொடுவிஷமும்
ஈளை யிருமலும்விட் டேகுமுண்டால் வாந்தியுண்டாம்
வாளையுறுங் கண்ணாய் வழுத்து
- பதார்த்த குண சிந்தாமணி
இது பாம்பின் விடங்கள், கோழை காசம், இருமல் இவற்றை நீக்கும் .வாந்தியை உண்டாக்கும்