துக்கப் பிறப்பாய் விடும் மூன்று – திரிகடுகம் 60

நேரிசை வெண்பா

பேஎய்ப் பிறப்பிற் பெரும்பசியும் பாஅய்
விலங்கின் பிறப்பின் வெருவும் - புலந்தெரியா
மக்கட் பிறப்பின் நிரப்பிடும்பை இம்மூன்றும்
துக்கப் பிறப்பாய் விடும் 60

- திரிகடுகம்

பொருளுரை:

பேயினது பிறப்புடையவர்களில் மிக்க பசியும், பாயும் இயல்புடைய மிருகப் பிறப்படைந்த உயிர்களின் அச்சமும், அறிவாகிய பொருளை உணராத மனிதப் பிறப்படைந்த உயிர்களில் வறுமையும் துன்பந் தருவனவாம்; இம் மூன்று பிறப்பு உயிர்களும் துன்பமாகிய பிறப்புள்ள உயிர்களாய் விடும்.

கருத்துரை:

பேய்ப்பிறப்பில் பசி வருத்தமும், விலங்குப் பிறப்பில் கொலைப்பயமும், மக்கட்பிறப்பில் வறுமைத் துன்பமும் மிகுந்திருக்கின்றமையால் எப்பிறப்பும் நலமுடையதன்று.

பிறப்பு நீங்க முயல வேண்டும் எனப்படுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jan-22, 2:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே