உரிமை
ஒற்றுமையாய்...
நீங்கள் இடும்
ஒரு "மை"...
ஆளப்போவது
யாரென்ற
உரிமையை... வழங்கும்...
அதன் பெயர்
"ஓட்டு".
உரிமையாய்...
நீ இடும்
ஒரு "மை"...
அவளை
உனக்கு மட்டும்
உரிமையாக்கும்...
அதன் பெயர்
"பொட்டு ".
மையையே
இட்டிடச் செல்லாது...
உரிமை கொள்ள
முடியுமா?