குறள் வெண்பாக்கள்

குறள் வெண்பாக்கள்
=================
தித்திக்கத் தித்திக்கத் தீயள்ளித் தின்றவர்க்(கு)
எத்திக்கு முண்டாம் இடும்பு
*
சொத்தென வாழ்வில் சுகதேகம் வாய்த்திடல்
முத்திலும் மேலாம் முழங்கு
*
தனக்கென வாழ்ந்திடும் தன்னலம் விட்டார்
மனமொரு மல்லிகை மொட்டு
*
சக்திக்கு மீறிச் சடங்குகள் செய்வார்தம்
பக்தியி லில்லையே பண்பு
*
மானத்தைக் காக்கும் மலிவுவிலை ஆடையை
ஈனமென் றெண்ணல் இழுக்கு
*
சொல்வதைச் செய்யார் சுகவாக்கை நம்பினார்
அல்லலில் வீழ்வர் அறிந்து
*
பிள்ளைகள் பெற்றே பிரிந்திடும் பெற்றவர்
கொள்கைகள் மாறும் குரங்கு
*
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (25-Feb-22, 3:51 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 64

மேலே